முதலமைச்சர் ஜெ.வுக்கு அஞ்சலி - பிரதமர் மோடி சென்னைக்கு புறப்பட்டார்

Asianet News Tamil  
Published : Dec 06, 2016, 10:46 AM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
முதலமைச்சர் ஜெ.வுக்கு அஞ்சலி - பிரதமர் மோடி சென்னைக்கு புறப்பட்டார்

சுருக்கம்

முதலமைச்சர் ஜெயலலிதா உடலுக்கு, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, தனது கடமையை திறமையுடன் செய்தவர் என கூறினார்.

கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா, ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துவந்த நிலையில், நேற்று இரவு 11.,30 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இதையடுத்து அவரது உடல் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், அங்கிருந்து சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் தோட்டத்தில¢ உள்ளராஜாஜி அரங்கில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து ஏராளமான பொதுமக்கள், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதையொட்டி மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கடசி தலைவர்கள் ஏராளமானோர் அவருக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறுதி சடங்கில் கலந்து கொள்வார் எனவும், அஞ்சலி செலுத்த டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டுவிட்டார் எனவும் தெரியவந்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

அன்பில் மகேஷ் குக்கர்..! கே.என்.நேரு சாமான் செட்..! திமுகவின் தேர்தல் ஆட்டம் ஆரம்பம்..!
பகலிலேயே கொழுந்தியாளை படுக்கைக்கு அழைத்த அனுமந்தன்! வர மறுத்ததால் வெறியில் கொன்*றேன்! பகீர் வாக்குமூலம்!