ஆறுமுகசாமி ஆணையத்தின் அதிரடியால் அதிர்ச்சியில் அப்பல்லோ!!!

Asianet News Tamil  
Published : Jul 13, 2018, 05:47 PM ISTUpdated : Sep 19, 2018, 02:41 AM IST
ஆறுமுகசாமி ஆணையத்தின் அதிரடியால் அதிர்ச்சியில் அப்பல்லோ!!!

சுருக்கம்

jayalalitha murder case Commission arumukasami Apollo in shock

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்த அப்பல்லோ மருத்துவமனையில் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்த உள்ளார். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறை, சிகிச்சை அளிக்கப்பட்ட விதம் குறித்து 29-ம் தேதி மாலை 7 மணி முதல் 45 நிமிடங்கள் ஆய்வு நடத்தப்படும் என்று தகவல் தெரிவிக்கின்றன. அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஜெயலலிதா மரணமடைந்தார்.பிறகு அவரது மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக பல்வேறு தரப்பிலும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி  ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக இதுவரை 50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

மேலும் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்த 75 நாட்களில் பலபேர் பார்த்தாகவும், வீடியோ பதிவு செய்ததாகவும் ஆணையத்திடம் சாட்சியகங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும் என்று ஆணையத்தின் வழக்கறிஞர்கள் முறையிட்டனர். இதனையடுத்து இன்று ஒரு முக்கிய உத்தரவை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் பிறப்பித்தது. அதில் வரும் 29-ம் தேதி பார்வையாளர் நேரம் முடிவடைந்த பின் 7 மணி முதல் 45 நிமிடங்கள் வழக்கறிஞர்கள் குழு இந்த ஆய்வை நடத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன்.. கூட்டணி முடிவாகும் முன்பே தொகுதியை உறுதி செய்த டிடிவி
திமுக அரசின் நலத்திட்டங்களால் பயன்பெறாத ஒரு குடும்பம் கூட தமிழகத்தில் இல்லை.. மார்தட்டும் முதல்வர் ஸ்டாலின்