முதல்வர் ஜெயலலிதா தனி வார்டுக்கு மாற்றம் – டாக்டர்கள் ஆலோசனை

 
Published : Nov 07, 2016, 11:09 PM ISTUpdated : Sep 19, 2018, 01:15 AM IST
முதல்வர் ஜெயலலிதா தனி வார்டுக்கு மாற்றம் – டாக்டர்கள் ஆலோசனை

சுருக்கம்

முலமைச்சர் ஜெயலலிதாவை, தனி வார்டுக்கு மாற்றம் செய்யஉள்ளனர். இதுபற்றி டாக்டர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், சிங்கப்பூர் பிசியோதெரபி பெண் நிபுணர்கள் இடைவிடாமல் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதையொட்டி அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் முதலமைச்சர் ஜெயலலிதா, பூரண குணமடைய வேண்டி, அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என தினமும் லட்சக்கணக்கானோர் தமிழகம் முழுவதும் உள்ள பல கோயில்களில் யாகம், பூஜை, தேர் இழுத்தல், அலகு குத்துதல் உள்பட பல்வேறு பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர்.

மேலும் முதலமைச்சர், பல்வேறு கட்சி தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், சினிமா நட்சத்திரங்களும், அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று, அவரது உடல்குறித்து விசாரித்து செல்கின்றனர்.

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளித்து கை, கால்களை அசைப்பதற்கு பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறார்கள். எழுந்து உட்காருவதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. விரைவில் நடப்பதற்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

நுரையீரல் நோய் தொற்று குணமாகி உள்ள நிலையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட செயற்கை சுவாசம் அவ்வப்போது நிறுத்தப்பட்டு இயற்கையாக சுவாசிப்பதற்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஜெயலலிதா தனக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் டாக்டர்களிடம் கேட்டு அறிந்து வருகிறார்.

மேலும் தனக்கு என்ன வேண்டும் என்பதையும் அவரே கேட்டு வாங்கி சாப்பிடுகிறார். கடந்த சில நாட்களாக ஜெயலலிதாவுக்கு, அவரது வீட்டில் இருந்து உணவு தயார் செய்யப்பட்டு கொண்டு வரப்படுகிறது என்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கிறது.

பிசியோதெரபி பயிற்சிகள் முடிந்து அவர் இயல்பாக நடக்கத் தொடங்கிய பின்னர, ஜெயலலிதா வீடு திரும்புவார் என்று நலம் விசாரிக்க வருபவர்களிடம் டாக்டர்கள் கூறுகின்றனர்.

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று 46வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலையில் நாளுக்கு நாள் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதைத்தொடர்ந்து விரைவில் தனி வார்டுக்கு மாற்றப்பட உள்ளார். தனிவார்டுக்கு மாற்றுவது குறித்து டாக்டர்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

குரங்கு கிடைத்த பூமாலை அதிமுக இல்லை, விமர்சனங்கள் கடுமையாக உள்ளபோது நான் விமர்சிப்பேன் - ஜெயக்குமார்
அப்போ எல்லாமே வதந்தி தானா.. போட்டி போட்டு மறுத்த டிடிவி தினகரன், தமிழிசை.. என்ன விஷயம்?