அடுத்த 3 நாட்களுக்கு.. தமிழகத்தில் மழை அடிச்சு ஊத்தப்போகுது.. உஷார்.! எந்த இடங்கள் தெரியுமா ?

Published : Apr 15, 2022, 11:11 AM IST
அடுத்த 3 நாட்களுக்கு.. தமிழகத்தில் மழை அடிச்சு ஊத்தப்போகுது.. உஷார்.! எந்த இடங்கள் தெரியுமா ?

சுருக்கம்

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘லட்சதீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது. 

மேலும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இன்று முதல் வருகிற 18-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்  லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்  நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி  இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று சேலம், நாமக்கல், திருப்பத்தூர்,ஜோலார்பேட்டை,ஈரோடு ஆகிய இடங்களில் மழை வெளுத்து வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பிறந்தநாள் வாழ்த்து சொல்லாத நண்பருக்கு ‘தர்ம அடி’ கொடுத்த நண்பர்கள்.. வேற மாதிரி சம்பவம் !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!