கூடுதல் கட்டணம் வசூலித்தால் திரையரங்கின் உரிமம் இரத்து..

Asianet News Tamil  
Published : Feb 03, 2017, 11:18 AM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
கூடுதல் கட்டணம் வசூலித்தால் திரையரங்கின் உரிமம் இரத்து..

சுருக்கம்

திரையரங்குகளில் கூடுதலாக கட்டணம் வசூலித்தால் அதன் உரிமங்கள் தாற்காலிகமாக இரத்து செய்யப்படும் என கரூர் ஆட்சியர் கு.கோவிந்தராஜ் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக கரூர் ஆட்சியர் கு.கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

“கரூர் மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் அனுமதிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்யும் திரையரங்குகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அந்த வகையில் வருவாய் கோட்டாட்சியர், எஸ்.பி ஆகியோர் அடங்கிய கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு கடந்த ஓராண்டாக செயல்பட்டு வருகிறது.

புகார்களை பொதுமக்கள் 1077 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். அடுத்த 24 மணிநேரத்துக்குள் சம்பந்தப்பட்ட திரையரங்கை குழுவினர் ஆய்வு செய்து அதற்கு அபராதம் விதிக்கப்படும்.

மேலும், கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்ந்தால் திரையரங்குகளின் உரிமங்கள் தாற்காலிகமாக இரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்தார். 

 

PREV
click me!

Recommended Stories

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் எதிர்பாராத மாற்றம்.. அரசு தேர்​வுத்துறை புதிய உத்தரவு!
மாம்பழம் சின்னம் யாருக்கு? மூன்று நாட்கள் டைம்.! அன்புமணிக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்றம்!