
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட சூரப்பள்ளி, சவுரியூர், காப்பரத்தாம்பட்டி, கரிக்காப்பட்டி பகுதிகளில் அதிமுக கட்சி கொடியை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஏற்றி வைத்தார். அதன்பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் மின் கட்டணம் 52 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கைத்தறி, விசைத்தறி, உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன. தமிழத்தை காப்பாற்ற முடியாத முதலமைச்சர் ஸ்டாலின், பீகார் சென்று சர்வகட்சி தலைவர்களுடன் சேர்ந்து பிரதமரை உருவாக்குகிறாராம்.” என்று சாடினார்.
மேலும், நான் முதலமைச்சராக இருந்தபோது, உங்கள் மீது வழக்கு போட்டிருக்க முடியும். ஆனால் வழக்கு போடவில்லை. பொது இடத்தில் கூட்டம் போட்டு எங்கள் ஆட்சி மீதுள்ள குற்றச்சாட்டை சொல்லுங்கள்; அதற்கு நான் பதில் தருகிறேன் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
காவலர்களுக்கான முதலமைச்சர் பதக்கம் பெறுபவர்கள் யார்.? பட்டியலை வெளியிட்ட தமிழக அரசு
எங்களுக்கு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம்தான் மனதில் இருந்தது. ஆனால், அதிமுக கொண்டு வந்த ஒவ்வொரு திட்டத்தையும் ரத்து செய்வதுதான் திமுகவின் சாதனையாக இருக்கிறது என்றும் எடப்பாடி பழனிசாமி சாடினார்.
செந்தில் பாலாஜி கைது விவகாரம் குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, கைதான அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். தமிழகத்தில் மதுபான பார்கள் மூலம் ஒரு நாளுக்கு ரூ.10 கோடி என ஆண்டுக்கு ரூ.3,600 கோடி ஊழல் செய்துள்ளனர் என்று குற்றம் சாட்டினார். இதற்காகத்தான் மத்திய அரசு ரெய்டு நடத்தியுள்ளதாக தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, செந்தில் பாலாஜி வாக்குமூலம் கொடுத்தால் பலர் சிக்குவார்கள் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக, தமிழக மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். நெஞ்சுவலி காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர் இலாக்கா இல்லாத அமைச்சராக் தொடர்வார் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.