
மழையிலும்,போக்குவரத்து நெரிசலிலும் மிதக்கும் சென்னை ...!
வடகிழக்கு பருவ மழை தொடங்கியவுடன் மழையின் வேகம் கொன்ம்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கி உள்ளது
இதன் காரணமாக நேற்று இரவு முதலே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது
அதே வேளையில் இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாள் என்பதால் பல்வேறு தலைவர்கள் மற்றும் பொதுமக்கள்,நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு தொடர்ந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்
இதன் காரணமாக சென்னை அண்ணா சாலையில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.மேலும்,அலுவலகம் செல்வோர் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர்.