
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து, 13 இடங்களில் 100 டிகிரியைத் தாண்டியுள்ளது. இதனிடையே, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரிக்கிறது. நேற்று மட்டும் 13 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. அதிகபட்சமாக திருச்சியில் 105 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. அரியலூர் 104, வேலூர் 103, ஈரோடு 102, மதுரை 101, சென்னை, கரூர், நாமக்கல், தருமபுரி, பாளையங்கோட்டை, திருப்பத்தூர் ஆகிய நகரங்களில் 100 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதற்கே அஞ்சு நடுங்கு வீட்டிலேயே முடங்கி விடுகின்றனர். தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.