மக்களே உஷார் !! தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை.. இன்று 22 மாவட்டங்களில் கனமழை.. வானிலை அப்டேட்

Published : Jul 28, 2022, 03:58 PM IST
மக்களே உஷார் !! தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை.. இன்று 22 மாவட்டங்களில் கனமழை.. வானிலை அப்டேட்

சுருக்கம்

தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மட்டும் 22 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.  

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழகத்தின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,

28.07.22: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம்‌, விருதுநகர்‌, தேனி, திண்டுக்கல்‌, மதுரை, சிவகங்கை, நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, ஈரோடு, சேலம்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி,
திருப்பத்தூர்‌, கரூர்‌, நாமக்கல்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

29, 30, 31, 01.08.22: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. பெரம்பலூர்‌, அரியலூர்‌, கடலூர்‌, திருச்சி மற்றும்‌ தஞ்சாவூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, ஈரோடு, சேலம்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்‌, கரூர்‌, நாமக்கல்‌, திருச்சி, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, பெரம்பலூர்‌ மற்றும்‌ அரியலூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க:கெத்தா விருதோடு வந்த அமைச்சர்..பாராட்டு மழையில் நனைத்த முதலமைச்சர்.. என்ன விருது தெரியுமா..?

சென்னையை பொருத்தவரை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

31.07.22 & 01.08.2022: குமரிக்கடல்‌ பகுதி மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌ தமிழக கடலோர பகுதிகளில்‌ சூறாவளிக்காற்றும்‌ மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கி.மீ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாள்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:ஹாப்பி நியூஸ்.. திருச்சி, காரைக்கால், நாகையிலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்.. எப்போது இருந்து ..?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சிம்பு விக்கெட்டை எடுத்தது நான்தான்! வைரலாகும் முதல்வர் ஸ்டாலின் ஸ்பின் பவுலிங் வீடியோ!
பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!