சாக்கடைக்குள் வாழ்க்கை...! தூங்க கூட இடம் இல்லை...! முதலமைச்சர் மாவட்டத்தில் அரங்கேறும் அவலம்...!

 
Published : Jul 02, 2018, 03:04 PM ISTUpdated : Sep 19, 2018, 02:35 AM IST
சாக்கடைக்குள் வாழ்க்கை...! தூங்க கூட இடம் இல்லை...! முதலமைச்சர் மாவட்டத்தில் அரங்கேறும் அவலம்...!

சுருக்கம்

heavy rain drainage water inside the home

சேலம் மாவட்டம் அம்மாபேட்டையில், நேற்று வெப்ப சலனம் காரணமாக பேய் மழை கொட்டி தீர்த்தது. இதனால் மழை நீருடன் சேர்ந்து சாக்கடை நீரும் வீட்டிற்குள் உட்புகுந்ததால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதற்கு முக்கிய காரணமாக அவர்கள் கூறுவது, பாதாள சாக்கடை திட்டம் அமைப்பதாக கூறி, சாலைகளை உயரமாக போட்டதால். சாலையில் ஓடும் தண்ணீரும் வீட்டுக்குள் வந்து விடுவதாகவும், இதனால் சாக்கடை நீர் மற்றும் மழை நீர் வெளியே போக முடியாமல் வீட்டிற்குள்ளே இருப்பதால், குழந்தைகளை வைத்துக்கொண்டு அவதிப்பட்டு வருவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் மாவட்டத்தில் மாநகராட்சி அவலம் அரங்கேறி வரும் சூழலால் உறங்க கூட இடம் இல்லாமல் இருப்பதாக தெரிவித்துள்ளனர் அப்பகுதி மக்கள்.
    

PREV
click me!

Recommended Stories

தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!
பூரண சந்திர தீக்குளித்து உயிரிழந்துள்ளார், இதுக்கு முழுக்க முழுக்க காரணம் திமுக தான்