ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் - தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு...

Asianet News Tamil  
Published : Apr 07, 2018, 10:35 AM ISTUpdated : Sep 19, 2018, 02:13 AM IST
ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் - தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு...

சுருக்கம்

Governor Resistance siege protest - Tamil Nadu Farmers Association Announcement ...

சேலம்

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கோரி ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சேலத்தில் தமிழக விசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 

இதில், "உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்,  

தேசிய நதிநீர் திட்டத்தை அமைக்க வேண்டும், 

தமிழக விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும்" என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்றும் முடிவெடுக்கபட்டது.

PREV
click me!

Recommended Stories

முடிவுக்கு வரும் திமுக - சிபிஎம் கூட்டணி? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எடுக்கப்போகும் அதிரடி முடிவு!
தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கனும் அந்த அடிப்படையில் தான் சசிகலா உடன் கூட்டணி! ராமதாஸ் பேட்டி