சூப்பர் நியூஸ் மக்களே.. கருணைத்தொகை 24,000 உயர்வு !! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு !!

Published : Feb 25, 2022, 11:07 AM IST
சூப்பர் நியூஸ் மக்களே.. கருணைத்தொகை 24,000 உயர்வு !! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு !!

சுருக்கம்

தமிழக அரசு,  தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் குறித்த கருணைத்தொகை அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. 

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் 9,242 பாழடைந்த குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு வழங்கப்படும் கருணைத்தொகையை ரூ.24 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 9,242 பாழடைந்த குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு கருணைத் தொகையாக ஒரு குடும்பத்திற்கு ரூ.8000 லிருந்து ரூ.24,000 ஆக உயர்த்தி வழங்குவதற்கு அரசு கொள்கை ரீதியான நிர்வாக அனுமதியை வழங்கியுள்ளது.

பாழடைந்த குடியிருப்புகளை புனரமைக்கும் பணி தொடங்குதலுக்கு இரண்டு தவணைகளில் அதாவது முதல் தவணையாக ரூ. 12,000 மற்றும் ஒரு வருடத்திற்குப் பிறகு இரண்டாவது தவணையாக ரூ.12,000 வழங்க அனுமதி வழங்கியுள்ளது.

இந்த தொகை இடமாறுதல் மற்றும் அடுத்தடுத்து வாடகை இடங்களில் தங்கும் போது தேவையான செலவினங்களைச் சந்திக்க அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதற்கிடையில்,புனரமைப்பில் உள்ள 9242 குடிமக்களுக்கு மேம்படுத்தப்பட்ட கருணைத் தொகையாக ஒரு குடும்பத்துக்கு தலா ரூ.24,000 ஐ ஒரே தொகுப்பாக வழங்கத் தேவையான நிர்வாக அனுமதியை வழங்குமாறு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக இயக்குநர் கோரியுள்ளார்’ என்று அதில் கூறப்பட்டு இருக்கிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!