அரசுப் பேருந்து ஓட்டுநர் தற்கொலை முயற்சி; பேருந்தை ஓட்ட கட்டாயப்படுத்தியதால் விபரீதம்…

 
Published : May 15, 2017, 08:05 AM ISTUpdated : Sep 19, 2018, 03:17 AM IST
அரசுப் பேருந்து ஓட்டுநர் தற்கொலை முயற்சி; பேருந்தை ஓட்ட கட்டாயப்படுத்தியதால் விபரீதம்…

சுருக்கம்

Government bus driver suicide attempt Danger of forced to drive bus

விழுப்புரம்

விழுப்புரத்தில், பேருந்தை ஓட்ட கட்டாயப்படுத்தியதால் அரசு பேருந்து ஓட்டுநர் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், மூன்றாவது பணிமனையைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் ஹென்றி பால்ராஜ். இவர் பணிமனையின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.

கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து பேருந்து ஓட்டிவிட்டு பணிமனையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார் ஹென்றி. இவரை பேருந்தை இயக்குமாறு கிளை மேலாளர் கட்டாயப்படுத்தி உள்ளார். ஆனால், ஹென்றி பால்ராஜ் அதற்கு மறுத்துள்ளார்.

தொடர்ந்து ஹென்றியைக் கட்டாயப்படுத்தியதால் அவர் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து, தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

கீழே விழுந்த ஹென்றிக்கு தலையில் பலத்த காயம் மற்றும் கையில் எலும்பு முறிவடைந்த நிலையில், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

100 கி.மீ. வேகம்.. விளம்பர பலகையில் பைக் மோதி பயங்கர விபத்து.. தலை துண்டாகி துடித்த மருத்துவ மாணவர்கள்
டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுவதா..? எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பகிரங்க சவால்..!