அதிமுக ஒன்றிய செயலாளர் வீட்டு கல்யாணத்தில் 110 பவுன் நகையை ஆட்டையப் போட்ட மர்ம மனிதன்…..

Asianet News Tamil  
Published : Apr 21, 2018, 09:30 AM ISTUpdated : Sep 19, 2018, 02:16 AM IST
அதிமுக ஒன்றிய செயலாளர் வீட்டு கல்யாணத்தில் 110 பவுன் நகையை ஆட்டையப் போட்ட மர்ம மனிதன்…..

சுருக்கம்

Gold ornament teft in thrivannamalai marraige house

ஆரணி அருகே அதிமுக பிரமுகர் இல்லத் திருமணவிழாவில் 110 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள அரையாளம் கிராமத்தை சேர்ந்த எம்.வேலு, மேற்கு ஆரணி அதிமுக ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வருகின்றார். இவரின் மகளுக்கு ஆரணி புறவழிசாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமண விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 8 மணிக்கு மணமகனின் சகோதரிகள் மூன்றாவது மாடியில் உள்ள அறையில் தங்களது நகைகளை வைத்துள்ளனர். 

இதனிடையே மர்ம நபர் அந்த அறையின் பின் பக்க ஜன்னலின் தாழ்பாளை நீக்கி அங்கு இருந்த 110 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றுவிட்டார்.

மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களும் வேறு கோணங்களில் திருப்பி வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்யாண மண்டபத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் சுற்றித்திரிந்ததால், அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

சொன்னதை செய்து காட்டிய முதல்வர் ஸ்டாலின்! 100 பேருக்கு மானிய விலையில் இ-ஸ்கூட்டர்!
3000 ரூபாய் பொங்கல் பரிசா ? தேர்தல் பரிசா? - ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு