நாமக்கல்லில் வரும் 24-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - ஆட்சியர் அறிவிப்பு...

 
Published : Nov 18, 2017, 09:49 AM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
நாமக்கல்லில் வரும் 24-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  - ஆட்சியர் அறிவிப்பு...

சுருக்கம்

Farmers Day Meeting on the 24th of Namakkal - Appointment of the Collector

நாமக்கல்

நாமக்கல்லில் வரும் 24-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது என்று ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அந்தச் செய்திக்குறிப்பில், "நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 24-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று, விவசாயம் தொடர்பான பல்வேறு தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் நிலம், பால் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் விவசாயம் தொடர்பான குறைகள் ஏதேனும் இருந்தால் அவற்றைத் தெரிவித்து உரிய நிவாரணம் பெறலாம்" என்று ஆட்சியரின் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு