திருச்சியில் பரபரப்பு - விஷ செடியை சாப்பிட்டு ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை முயற்சி

First Published Dec 25, 2016, 10:11 AM IST
Highlights


திருச்சியில் விஷ செடியை சாப்பிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம் துவரங்குறிச்சி அடுத்த தாழம்பாடி யாகவரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (35). திருச்சியில் உள்ள பேக்கரி ஒன்றில் டீ மாஸ்டராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி கலைச்செல்வி (32). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும். அதேபோல, நேற்று முன்தினம் இரவு அவர்களுக்குள் குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த சரவணன், வீட்டில் இருந்து வெளியே சென்றார்.

இதனால் மனமுடைந்த கலைச்செல்வி, வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் இருந்த காஞ்சரன் என்ற விஷ இலையைப் பறித்து அரைத்து சாப்பிட்டார். மேலும், தனது குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளார். இதையடுத்து 4 பேரும் வீட்டில் மயக்கமடைந்து விழுந்து கிடந்தனர்.

வெளியே சென்ற சரவணன் வீடு திரும்பியபோது, மனைவி மற்றும் பிள்ளைகள் மூச்சு  பேச்சு இல்லாமல் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே அவர்கள் வைத்து இருந்த விஷ இலையை சாப்பிட்டு அவரும், மயங்கி விழுந்தார்.

அப்போது, அங்கு வந்த பக்கத்து வீட்டுக்காரர்கள், உடனடியாக 5 பேரையும் மட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனா. பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். குடும்ப தகராறில், குடும்பத்தில் உள்ள 5 பேரும் விஷ செடி சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!