டோல்கேட்டில் துப்பாக்கியுடன் ஊழியர்...!!! – பத்திரிக்கையாளர்களை தாக்கியதால் கைது...

 
Published : May 03, 2017, 09:52 PM ISTUpdated : Sep 19, 2018, 03:14 AM IST
டோல்கேட்டில் துப்பாக்கியுடன் ஊழியர்...!!! – பத்திரிக்கையாளர்களை தாக்கியதால் கைது...

சுருக்கம்

Employee with gun in tolgate Arrested for hitting journalists

விழுப்புரம் சுங்கசாவடியில் ஊழியர் ஒருவர் காரில் வந்த பத்திரிக்கையாளர்களை தாக்கியதால் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

திருச்சியில் இருந்து 4 பத்திரிககையாளர்கள் விழுப்புரம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். உளுந்தூர்பேட்டை சுங்கசாவடியில் ஊழியர்கள் கட்டணம் கேட்டுள்ளனர்.

அப்போது நேற்று இரவே போவதற்கும் வருவதற்கும் எடுத்துவிட்டோம் என பத்திரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சுங்கசாவடி சீட்டையும் தேடி கண்டுபிடித்து கொடுத்துள்ளனர்.

ஆனால் சுங்கசாவடியில் வேலை பார்த்த ஊழியர்கள் சிலர் தகராறு செய்துள்ளனர். இதனால் இரு தரப்புக்கு வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நீண்டது.

இதைதொடர்ந்து அங்கு வேலைபார்க்கும் வடமாநில ஊழியர் ராஜேஷ் என்பவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார்.

இதையடுத்து பத்திரிக்கையாளர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார் ராஜேஷை கைது அவரிடம் இருந்து துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

டோல்கேட் ஊழியர் துப்பாக்கியுடன் சுற்றி திரிவது அப்பகுதியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

11 படுதோல்வி.. பழனிசாமி பெயரைச் சொல்லவே வெட்கமா இருக்கு! கோபத்தில் கொப்பளித்த ஓபிஎஸ்!
இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!