சிலைகடத்தல் தடுப்பு விவகாரம் பெரிய புயலை கிளப்பி உள்ளது. இதில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவில் இருந்த காவலர் ஒருவர் வழக்கறிஞர் யானை ராஜேந்திரனுக்கு எழுதிய கடிதத்தில் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
சிலைகள் ஒரு விவசாயிடம் இருக்கும் விபரம் தெரிந்து அவனை மிரட்டி சிலைகளை பறித்ததும் பின்னர் அதை ஆய்வாளர் காதர் பாட்சா , உதவி ஆய்வாளர் சுப்புராஜ் இருவரும் சிலைகளை சென்னை கொண்டு வந்து சிலைகடத்தல் தடுப்பு மன்னன் தீனதயாளனிடம் 2 சிலைகளை ரூ.25 லட்சத்துக்கு விற்றுள்ளனர்.
பின்னர் மற்ற சிலைகளையும் இன்ஸ்பெக்டர் காதர் பாட்சா வேறு வேறு நபர்களுக்கு விற்றுள்ளார்.