
ஏப்ரல் 23… நாளை ஒரு சாதாரண நாள் இல்லை. தமிழகத்தின் ஜனநாயக துடிப்பு அதிகரிக்கும் முக்கியமான நாள். ஒவ்வொரு வாக்கும் ஒரு குரல், ஒவ்வொரு பயணமும் ஒரு பொறுப்பு. இந்த முறை, மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் உறுதியாக களம் இறங்கியுள்ளது. அதற்காக மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன.