பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்.. தேர்வுத்துறை இயக்குனர் புதிய உத்தரவு..

Published : Apr 02, 2022, 08:02 AM IST
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்.. தேர்வுத்துறை இயக்குனர் புதிய உத்தரவு..

சுருக்கம்

பொதுத்‌ தேர்வெழுதும்‌ மாணவர்களின்‌ அகமதிப்பீடு மதிப்பெண்‌ விவரங்களை, ஏப்‌.19-ஆம்‌ தேதிக்குள்‌ இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்ய வேண்டும்‌ என தேர்வுத்‌ துறை இயக்குநர்‌ உத்தரவிட்டுள்ளார்.  

மார்ச் 2 ஆம் தேதி 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது. அதன் படி, பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதியும், பிளஸ் 1 பொதுத்தேர்வு மே 9 ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6 ஆம் தேதியும்  தொடங்கிறது.மேலும், 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கும் என்று ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது.

அதன்படி, 10 , 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் மே 2 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மே  4 ஆம் தேதிக்குள் செய்முறை தேர்வு மதிப்பெண்களை முதன்மை கல்வி அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.இந்நிலையில் பொதுத்‌ தேர்வெழுதும்‌ மாணவர்களின்‌ அகமதிப்பீடு மதிப்பெண்‌ விவரங்களை, ஏப்‌.19-ஆம்‌ தேதிக்குள்‌ இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்ய வேண்டும்‌ என தேர்வுத்‌ துறை இயக்குநர்‌ உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர்‌, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், பிளஸ்‌1, பிளஸ்‌ 2 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே மாதம்‌ நடைபெற உள்ளது. செய்முறைத்‌ தேர்வுகள்‌
ஏப்‌.25 முதல்‌ மே 2-ஆம்‌ தேதிக்குள்‌ நடத்தப்படவுள்ளன. அதற்குமுன்‌ மாணவர்களின்‌ அகமதிப்பீடு மதிப்பெண்களை பதிவுசெய்யும்‌ பணிகள்‌ முடிக்கப்பட வேண்டும்‌ என்று கூறப்பட்டுள்ளது.

எனவே, மாணவர்களின்‌ வெற்று மதிப்பெண்‌ பட்டியல்களை ஏப்‌.7 முதல்‌ 9-ஆம்‌ தேதிக்குள்‌ தேர்வுத்‌ துறை இணையதளத்திலிருந்து
பதிவிறக்கம்‌ செய்து கொள்ள வேண்டும்‌. அதில்‌ தலைமையாசிரியர்கள்‌ மாணவர்களின்‌ அகமதிப்பீடு மதிப்பெண்களை பூர்த்தி செய்து, அதன்‌ விவரங்களை ஏப்‌.12 முதல்‌ 19-ஆம்‌ தேதிக்குள்‌ பதிவேற்ற வேண்டும்‌. அதன்பின்‌ அதற்கான மதிப்பெண்‌ பட்டியலை அந்தந்த மாவட்டக்‌ கல்வி அலுவலகத்தில்‌ மே 21- ஆம்‌ தேதிக்குள்‌ தலைமையாசிரியர்கள்‌ சமர்ப்பிக்க வேண்டும்‌. அதன்‌ அறிக்கையை முதன்மைக்‌ கல்வி அதிகாரிகள்‌ மே 23-ஆம்‌ தேதிக்குள்‌ அந்தந்த மாவட்ட தேர்வுத்‌ துறை அதிகாரிகளிடம்‌ ஒப்படைக்க வேண்டும்‌ என கூறப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

திமுக ஆட்சியை வீழ்த்த எடப்பாடியார் சூளுரை! மதுரையில் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அதிரடி
முதல்வர் ஸ்டாலின் மக்களிடம் பொய்யை பேசி....மக்களிடம் அச்சத்தை உருவாக்குகிறார் ! அண்ணாமலை பேட்டி