”வெளியாகிறது அதிர்ச்சி தகவல்”..!! -  தமிழகம் முழுவதும் உஷார் நிலை.. டிஜிபி அதிரடி உத்தரவு...

First Published Sep 26, 2017, 3:49 PM IST
Highlights
dgp t.k. rajendran new ordered to tamilnadu police


தமிழ்நாடு சிறப்பு காவல்படை காவலர்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என டிஜிபி அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தமிழகத்தில் பொதுவாகவே, பரபரப்பான அரசியல் சூழ்நிலைநிலவும் போது, எந்த சூழ்நிலையையும் சமாளிக்க காவலர்கள் தயாராக இருக்க வேண்டும் என டிஜிபி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள19 சிறப்பு காவல் படைக்கும் இந்த உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகமே பெரும் பரபரப்பில் காணப்படுகிறது.

ஏன் இந்த திடீர்உத்தரவு என பலரும் குழம்பி வருகின்றனர்.பொதுவாகவே முக்கிய சமபவங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில் தான் இது போன்ற ஒரு  அறிவிப்பு வெளியாகும்.இந்நிலையில் இன்றும் நாளையும் அசாதாரண சூழ்நிலையை  சமாளிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள காவல் படையினரையும்,அதே  வேளையில் குறிப்பிட்ட சில இடத்தில் தீவிர பாதுகாப்பையும் மேற்கொள்ள  வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

click me!