லஞ்சம், ஊழலுக்கு எதிராக உறுதிமொழி எடுத்த நீலகிரி கிராம மக்கள்….

Asianet News Tamil  
Published : Nov 04, 2017, 09:01 AM ISTUpdated : Sep 19, 2018, 01:23 AM IST
லஞ்சம், ஊழலுக்கு எதிராக உறுதிமொழி எடுத்த நீலகிரி கிராம மக்கள்….

சுருக்கம்

Demonstration to provide law with equal pay for equal work ......

நீலகிரி

நீலகிரியில் உள்ள கிராமத்தில் நடைபெற்ற உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில் மக்கள் அனைவரும் இலஞ்சம், ஊழலுக்கு எதிராக உறுதிமொழி எடுத்தனர்.

இலஞ்சம், ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி நீலகிரி மாவட்டம் பந்தலூரில் உள்ள மகாத்மா காந்தி சேவை மையம், நுகர்வோர் மனிதவள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம் இணைந்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஒன்றை நேற்று நடத்தியது.

இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு, நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் காளிமுத்து தலைமை தாங்கினார்.

மகாத்மா காந்தி பொது சேவை மையத் தலைவர் நெளஷாத், சிவசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், பந்தலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள இளைஞர்கள், மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் அனைவரும் இலஞ்சம், ஊழல் ஒழிப்புக்கு ஆதரவாகவும், நேர்மையாக இருப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

PREV
click me!

Recommended Stories

அனல் பறந்த 2026 சட்டமன்றம் | முதலமைச்சர் விஜய்-ன் அறிவிப்புகளை ஆதாரங்களுடன் துவம்சம் செய்த உதயநிதி !
Ration Card: ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட்: இனி எந்த கடையிலும் பொருட்கள் வாங்கலாம்.. ஏடிஎம் போல மாறும் சிஸ்டம்!