
தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தும், ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. ஆளுநரின் தாமதமும், டெல்லியின் தலையீடும் அரசியல் நெருக்கடியை உருவாக்கியுள்ளதால் மாநில உரிமைக்காக எதிர்க்கட்சிகள் விஜய்க்கு மறைமுக ஆதரவு அளித்து வருகின்றன. தமிழக அரசியலில் இதுவரை இல்லாத பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், முழுமையான பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ஆளுநர் மாளிகையில் இருந்து தொடங்கிய அரசியல் நகர்வுகள் அனைத்தும் டெல்லியின் அரசியல் சதுரங்கமாகவே பார்க்கப்படுகின்றன.