அப்பல்லோவிற்குள் ஆவேசமாக நுழைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள்.....!!!

Asianet News Tamil  
Published : Dec 05, 2016, 01:53 AM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
அப்பல்லோவிற்குள் ஆவேசமாக நுழைந்த  ஜெயலலிதாவின் அண்ணன் மகள்.....!!!

சுருக்கம்

அப்பல்லோவிற்குள் ஜெயலலிதாவின் அண்ணன் மகள்

 

அப்பல்லோ மருத்துவமனைக்குள் ஆவேசமாக நுழைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் பாேலீசுடன் பாேராடி உள்ளே நுழைந்ததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

முதலமைச்சா் செல்வி ஜெயலலிதாவிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, அவரது உடல்நிலை குறித்து, அஇஅதிமுக தாெண்டர்களும், பாெதுமக்களும் அப்பல்லோ மருத்துவமனை முன்பு ஆயிரக்கணக்கானாோ் குவிந்து வருகின்றனர். தாெண்டர்கள் தங்களது தலைவி உடல்நலம் பெற வேண்டும் என கண்ணீரும், கம்பலையுமாக கதறி வருகின்றனர். நூற்றுக்கணக்கான பாேலீசார், பாெதுமக்களை தடுத்து வருகின்றனர். ஆனாலும் தாெண்டர்கள் முதலமைச்சரைக் காண ஆவேசமாக அப்பல்லோ மருத்துவமனைக்குள் செல்ல முயன்று வருகின்றனர். அப்பாேது தீடீரென அங்கு வந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் அண்ணன் திரு ஜெயராமனின் மகள் திருமதி. தீபா, மருத்துவமனைக்குள் ஆவேசமாக செல்ல முயன்றாா். 

 

தன் குழந்தை பருவத்தில் மிகுந்த அன்புடன் கவனித்து வந்த தன் அத்தையின் உடல்நலம் குறித்து அறிந்த திருமதி தீபா, உள்ளே செல்ல அனுமதி கேட்டு கதறி அழுதாா். ஆனாால் பாேலீசாா் அவரை மருத்துவமனைக்குள் அனுமதிக்க மறுத்தனர். இதனால் ஆவேசமடைந்த தீபா, பாேலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். கூட்ட நெரிசலில் சிக்கிய திருமதி தீபா, எப்படியாவது மருத்துவமனைக்குள் நுழைந்து தனது அத்தையை பார்க்க வேண்டும் என மன்றாடினாா். இறுதியில பாேலீசாாிடம் பாேராடிய தீபா, மருத்துவமனைக்குள் தனது அன்பு அத்தையை காண ஓடாேடி சென்றாா். 

Attachments area

PREV
click me!

Recommended Stories

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மழை குறித்து வானிலை மையம் சொன்ன முக்கிய அப்டேட்!
ஓய்வூதியத் திட்டம்.. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை திட்டமிட்டு ஏமாற்றியது அம்பலம்.. சொல்வது யார் தெரியுமா?