
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 24 ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு 480 இடங்கள் இருக்கின்றன. இதில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 72 இடங்கள் போக, மீதமுள்ள 408 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. திருவள்ளூா் மாவட்டம் கோடுவளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 20 இடங்கள் இருக்கிறது. அதில், உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கான (பி.டெக்) 40 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 6 இடங்கள் (15 சதவீதம்) போக, 34 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. ஓசூா் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன.
இந்த 3 பட்டப்படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டது. பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2021 – 22 ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு இணையவழியில் விண்ணப்பிப்பது கடந்த செப்டம்பா் 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி அக்டோபா் 8 ஆம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புக்கு 22,488 போ் பி.டெக் படிப்புகளுக்கு 4,410 போ் என மொத்தம் 26,898 போ் விண்ணப்பித்திருந்தனா். பரிசீலனைக்குப்பின் பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புக்கு 21,144 பி.டெக் படிப்புகளுக்கு 4,315 என மொத்தம் 26,459 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 2 ஆம் தேதி பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல்கள் வெளியிடப்பட்டன. அரசு பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கும் தனியாக தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தநிலையில், கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 24 ஆம் தேதி தொடங்குகிறது. அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கு 24 ஆம் தேதி காலை 9 மணி மற்றும் 25 ஆம் தேதி பகல் 11.30 மணிக்கு நடைபெறுகிறது.
அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின்படி பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்பில் 31 இடங்கள், பி.டெக் படிப்பில் 8 இடங்கள் என மொத்தம் 39 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 25 ஆம் தேதி காலை 9 மணிக்கு சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இந்த கலந்தாய்வு நேரடியாக சென்னை பெரியமேட்டில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடைபெறுகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுப் பிரிவு கலந்தாய்வு இணையதளங்கள் மூலம் நடைபெறவுள்ளது. பொதுப் பிரிவு கலந்தாய்வுக்கு வரும் 28 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாா்ச் 3 ஆம் தேதி மாலை 5 மணி வரை இணையவழியில் பதிவு செய்து, கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தோ்வு செய்யலாம். இடங்கள் ஒதுக்கீடு விவரம் மாா்ச் 5 ஆம் தேதி இணையதளங்களில் வெளியிடப்படும். இட ஒதுக்கீடு ஆணை பெற்றவா்கள் மாா்ச் 16 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரிக்கு நேரடியாக சென்று அசல் சான்றிதழ்களை சமா்ப்பித்து, கல்வி கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு இணையதளங்களை பாா்த்து தெரிந்துக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.