மியான்மரில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை தேவை... பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!!

By Narendran SFirst Published Sep 21, 2022, 4:42 PM IST
Highlights

மியான்மரில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட 300 இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். 

மியான்மரில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட 300 இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதுக்குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மியான்மர் நாட்டில் சுமார் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆட்பட்டிருப்பதாக மாநில அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது என்பதை இந்தியப் பிரதமரின் உடனடி கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். அவர்கள் ஆரம்பத்தில் தனியார் ஆட்சேர்ப்பு முகமைகள் மூலம் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான வேலைகளுக்காக தாய்லாந்து நாட்டிற்குச் சென்றதாகத் தெரியவருவகிறது.

இதையும் படிங்க: சென்னை ஐஐடியில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை.. விண்ணப்பிப்பது எப்படி..? முழு விவரம்..

ஆன்லைனில் சட்டவிரோத வேலைகளை மேற்கொள்ளும் பொருட்டு அவர்கள் தாய்லாந்தில் இருந்து மியான்மருக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்பது தற்போது தெரியவருவந்துள்ளது. மேலும், அவர்கள் அத்தகைய சட்டவிரோத வேலைகளை செய்ய மறுத்ததால் வேலையளிப்போரால் கடுமையாகத் தாக்கப்படுகிறார்கள் என்று தகவல்கள் வருகிறது.  அவர்களில் 17 தமிழர்களுடன் மாநில அரசு தொடர்பில் உள்ளனர். அவர்களை விரைவாக மீட்பதற்கு அரசின் உதவியை நாடுகின்றனர்.

இதையும் படிங்க: சாத்தான்குளம் தந்தை மகனை காவலர்கள் தொடர்ச்சியாக கடுமையாக தாக்கினர்: தலைமை காவலர் சாட்சியம்!!

மியான்மரில் சட்டவிரோதமாக சிறைப்பிடிக்கப்பட்டுள்ள நமது குடிமக்களின் அவலநிலையைக் கருத்தில்கொண்டு உடனடியாக அவர்களை மீட்பதற்கும், பாதுகாப்பாக தாயகத்திற்கு திரும்ப அழைத்துவரவும், மியான்மரில் உள்ள தூதரகத்திற்கு இப்பிரச்சினை குறித்து விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வெளியுறவு அமைச்சகத்திற்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கவேண்டும். இது தொடர்பாக பிரதமரின் அவசர தலையீட்டை கோருகிறேன் என்று தெரிவித்துள்ளார். 

click me!