தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடித்து வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் தெற்கு கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அதே இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதன் காரணமாக, தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், தமிழகத்தின் பிற பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.