
கும்பகர்ணனைப் போல் தூங்கிக் கொண்டிருக்காமல் நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக பொது நூலகத் துறையையும், மாவட்ட நூலக துறையையும் இணைத்து ஒரே அமைப்பாக 1989-ம் ஆண்டு தமிழக அரசு அறிவித்து ஆணை பிறப்பித்தது.
அதனைத் தொடர்ந்து மாவட்ட நூலகங்களில் முதல் நிலை நூலகர்களாக பணியாற்றியவர்கள், 3 ஆம் நிலை நூலகர்களாக மாற்றப்பட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், மனுதாரர்களின் பதவி உயர்வுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது என தமிழ்நாடு நிர்வாக தீர்பாயம் உத்தரவிட்டது. அதே சமயம் பதவி உயர்வுக்கான விதிகளை வகுக்கவும் நிதிமன்றம் அறிவுறுத்தியது.
ஆனால், 17 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழக அரசு தற்காலிக விதிகளை வகுத்தது. நூலகத் துறையில் பணியாற்றிய மணிகண்டன், அசோகன், மாதேஸ்வரன் உள்ளிட்ட 4 பேரை கல்வித் துறைக்கு நேரடியாக நியமிக்கப்பட்டனர். அதன் அடிப்படையில் 4 பேரையும் 2 ஆம் மற்றும் 3 ஆம் நிலை நூலகர்களாக மாற்றி உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து மனுதாரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், குறித்த காலத்தில் பதவி உயர்வுக்கான விதிகளை வகுத்திருந்தால், இந்த பிரச்சனை வந்திருக்காது. நீதிமன்றத்தின் நேரமும் வீணடிக்கப்பட்டிருக்காது என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இனி வரும் காலங்களில் கும்பகர்ணனைப் போல் தூங்கிக் கொண்டிருக்காமல் நீதிமன்ற உத்தரவுகளை உடனுக்குடன் அமல்படுத்தும் என நம்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.