மீன்களை பிடிங்கிக் கொண்டு மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை…

Asianet News Tamil  
Published : Dec 24, 2016, 11:37 AM ISTUpdated : Sep 19, 2018, 02:53 AM IST
மீன்களை பிடிங்கிக் கொண்டு மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை…

சுருக்கம்

நாகை மாவட்டம், கடலுக்குள் சென்ற நாகை மீனவர்கள் 9 பேரிடம் இருந்து மீன்களைப் பிடிங்கிக் கொண்டு, இலங்கை கடற்படையினர் மீன்வர்களை விரட்டியடித்துள்ளனர்.

நாகை செருதூர் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் ரெத்தினவேல் (53), கவியரசன் (24), நிவாஸ் (18), விஜயரசன் (20), ஜெயபிரகாஷ் (18), பிரவீன் (19), வினோத் (27), விக்கி (24), முருகவேல் (32) ஆகிய 9 பேரும் கோடியக்கரையில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் வியாழக்கிழமை காலை 3 கண்ணாடியிழைப் படகுகளில் கடலுக்குள் சென்றுள்ளனர்.

வெள்ளிக்கிழமை அதிகாலையில் கோடியக்கரைக்கு அப்பால் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீன்களை பிடிங்கிக் கொண்டு எச்சரித்து விரட்டி அடித்துள்ளனர்.

இதனையடுத்து, படகுகளுடன் கோடியக்கரையில் கரையை அடைந்த மீனவர்களிடம் தனிப்பிரிவு மற்றும் கடலோரக் காவல் நிலைய காவலாளர்கள் விசாரணை நடத்தினர்.

PREV
click me!

Recommended Stories

99% வாக்குறுதி நிறைவேற்றமா..? மனசாட்சியே இல்லாம பொய் பேசலாமா முதல்வரே..? விளாசும் அன்புமணி
12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு.. வெளியான முக்கிய அறிவிப்பு!