தமிழகத்தில் 13 மாவட்டங்களில் காலை 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

Published : May 11, 2024, 08:23 AM IST
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் காலை 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சுருக்கம்

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் அளித்துள்ள சமீபத்திய தகவலின்படி, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு, காலை 10 மணிவரை லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சூழற்சி நிலவுகிறது என்றும் இதனால் தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கோவையில் 3.5 கோடி மதிப்புள்ள பூங்கா நிலம் ஆக்கிரமிப்பு.. மதில் சுவரை இடித்து கையகப்படுத்துங்க.. பொதுமக்கள் கோரிக்கை!
பிளம் கேக் யார் சாப்பிடுவது என தி.மு.க - த.வெ.க - வுக்கு போட்டி ! அண்ணாமலை அதிரடி பேட்டி