காவிரி மருத்துவமனை முன்பு 1000 போலீசார் குவிப்பு; ஆ.ராசா கெஞ்சல்...கதறும் தொண்டர்கள்...தலைவா என கோஷம்

 
Published : Jul 29, 2018, 11:00 PM ISTUpdated : Sep 19, 2018, 02:46 AM IST
காவிரி மருத்துவமனை முன்பு 1000 போலீசார் குவிப்பு; ஆ.ராசா கெஞ்சல்...கதறும் தொண்டர்கள்...தலைவா என கோஷம்

சுருக்கம்

Cauvery hospital was previously concentrated in 1000 police

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள காவிரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். எங்கு பார்த்தாலும் அழுகுரல் சத்தம். .தலைவா, தலைவா என தொண்டர்கள் கோஷமிட்டு வருகின்றனர். காவிரி மருத்துவமனை முன்பு கதறும் திமுக தொண்டர்களை ஆ.ராஜா சமானானப்படுத்தினார். மருத்துவமனைக்கு சென்ற 20 நிமிடங்கள் வெளியே வந்தார் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன். ஆனால் அவரது வண்டிக்கு வழிவிடுமாறு ஆ.ராஜா மைக்கில் அறிவுறுத்தினார்.

 

மேலும் தொண்டர்கள் கலைந்து செல்லும் படியும் ஆ.ராஜா அறிவுறுத்தினார். மருத்துவமனைக்கு வெளியே கூடியிருக்கும் ஏராளமான தொண்டர்கள் கலைந்து செல்ல காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மருத்துவமனை வளாகம் முன் அமைக்கப்பட்ட தடுப்புகள் வீசியெறியப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது என்ற காவேரி மருத்துவமனையின் அறிக்கை வெளியானதையடுத்து மு.க.ஸ்டாலின், கனிமெழி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டனர். 

PREV
click me!

Recommended Stories

அந்த முட்டாளுக்கு தான் சொல்லுறேன் திமுக ஆட்சிக்கு வந்து செஞ்ச முதல் ஊழல் இதுதான் - ஹெச்.ராஜா பேட்டி
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு! பழனிசாமியின் பக்கா பிளான்!