மாமல்லபுரம் அருகே திடீரென தீபிடித்து எரிந்த கார்… பெண் உட்பட 3 பேர் உடல் கருகி உயிரிழப்பு…

Asianet News Tamil  
Published : May 27, 2017, 10:26 PM ISTUpdated : Sep 19, 2018, 12:40 AM IST
மாமல்லபுரம் அருகே திடீரென தீபிடித்து எரிந்த கார்… பெண் உட்பட 3 பேர் உடல் கருகி உயிரிழப்பு…

சுருக்கம்

Car fire accident at Mamallapuram

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே கார் திடீரென தீப்பிடித்து  எரிந்ததில் ஒரு பெண் உட்பட 3 பேர்  பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை எப்போதுமே சுறுசுறுப்பாக இருக்கும். புதுச்சேரி செல்லும் வாகனங்கள், சுற்றுலாப் பயணிகள் என எப்போதுமே போக்குவரத்து மிகுந்த இந்த சாலையில் அடிக்கடி விபத்துகளும் நடப்பதுண்டு.

இந்நிலையில் மாமல்லபுரத்தை அடுத்த கல்பாக்கம் அருகே உள்ள மணமை கிராமத்தில் நின்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதில் காரில் இருந்த பெண் உட்பட மூன்று பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.. காரில் ஏற்பட்ட தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள் மூன்றுபேரின் உடல்களை கருகிய நிலையில் மீட்டனர். 

இது குறித்து கல்பாக்கம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து காரில் இருந்தவர்கள் யார் ? எப்படி விபத்து நடந்தது ? என விசாணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

இன்னும் 10 ஆண்டுகளில் யாருக்கும் குழந்தை பாக்கியம் இல்லாமல் போய்விடும்.. நயினார் நாகேந்திரன்!
சொந்த கட்சி நிர்வாகியின் கார்கள் சல்லி சல்லியாக உடைப்பு! பாஜக முக்கிய நிர்வாகியின் பதவி பறிப்பு! வெளியான அதிர்ச்சி காரணம்?