நேருக்கு நேர் மோதி கொண்ட அரசு பஸ் - லாரி : 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி

Asianet News Tamil  
Published : May 05, 2017, 09:49 AM ISTUpdated : Sep 19, 2018, 03:14 AM IST
நேருக்கு நேர் மோதி கொண்ட அரசு பஸ் - லாரி : 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி

சுருக்கம்

bus accident killed 5 near dindigul

திண்டுக்கல் அருகே அரசு பேருந்துடன் லாரி மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திண்டுக்கல்லில் இருந்து அரசு பேருந்து ஒன்று 40 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது.

அந்த பேருந்து மதுரை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெருமாள்கோவில் பட்டி என்ற கிராமம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பயங்கரமாக மோதி விபத்தக்குள்ளானது.

இந்த விபத்தில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த 5 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 6 பேர் பேர் திண்டுக்கல் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து பெருமாள்கோவில்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

PREV
click me!

Recommended Stories

தவெக பாஜகவின் B-டீமாக தான் அணைத்து நிலையிலும் செயல்படுகிறது ! சேகர்பாபு பேட்டி
விவசாயிகளை ஏமாற்றும் அரசியல்வாதிகள்!" – மேகதாது அணைக்கு எதிராக திருச்சியில் விவசாயிகள் போராட்டம்!