கோவையில் பயங்கரம்.. ஐடி ஊழியர் தலையில் ஏறி இறங்கிய அரசுப் பேருந்து.. துடிதுடித்து உயிரிழப்பு.!

By vinoth kumarFirst Published Apr 11, 2022, 3:32 PM IST
Highlights

கோவை சின்னியம்பாளையம் அருகே உள்ள ஆர்.ஜி.புதூரை சேர்ந்தவர் தர்மராஜ்(21). ஐ.டி.ஊழியர். சம்பவத்தன்று இவர் தனது இருசக்கர வாகனத்தில் அவிநாசி ரோட்டில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தர்மராஜ் கீழே விழுந்தார். 

கோவை அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த ஐடி ஊழியர் மீது அரசுப் பேருந்து சக்கரம் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை சின்னியம்பாளையம் அருகே உள்ள ஆர்.ஜி.புதூரை சேர்ந்தவர் தர்மராஜ்(21). ஐ.டி.ஊழியர். சம்பவத்தன்று இவர் தனது இருசக்கர வாகனத்தில் அவிநாசி ரோட்டில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தர்மராஜ் கீழே விழுந்தார். 

அப்போது அந்த வழியாக சென்ற அரசு பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தர்மராஜின் தலையில் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தர்மராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!