“இந்த அக்கா எப்பவும் சிரிப்பு மூட்டுவாங்க…” பணம் பட்டுவாடா நடக்காமல் இருந்தால் நாங்கள் ஜெயித்திருப்போம் – தமிழிசை காமெடி

Asianet News Tamil  
Published : Nov 22, 2016, 11:59 AM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
“இந்த அக்கா எப்பவும் சிரிப்பு மூட்டுவாங்க…” பணம் பட்டுவாடா நடக்காமல் இருந்தால் நாங்கள் ஜெயித்திருப்போம் – தமிழிசை காமெடி

சுருக்கம்

பணம் பட்டுவாடா நடக்காமல் இருந்தால் இடைத்தேர்தலில் நாங்கள் ஜெயித்துஇருப்போம் என பாஜக மாநில தலைவர் தமிழிசை கூறினார்.

தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இடைத் தேர்தல் நடந்தது. இதில், போட்டியிட்ட பாஜக தோல்வியை தழுவியது.

இதையொட்டி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், செய்தியாளர்களிடம் கூறியதாவது.

சட்டமன்ற இடைத்தேர்தல் என்றலே ஆளுங்கட்சிக்கு சாகதமாக அமைந்துவிடும் என்பது சட்ட விதிகளாகவே உள்ளது. இதனை மாற்றுவதற்காகவே, பாஜக இடைத் தேர்தலில் போட்டியிட்டது. ஆனால், 4 தொகுதியிலும் பணப்பட்டுவாடா அதிகளவில் நடந்தது. இதனால், நாங்கள் தோல்வியடைந்தோம்.

வளர்ந்து வரும் கட்சிகளை தோற்கடிப்பது, ஆளுங்கட்சியின் வேலையாகவே இருக்கும். அதேபோலதான் நாங்கள் தேசிய கட்சியாக இருந்தாலும், தமிழகத்தில் வளர்ந்து வரும் கட்சியாக இருக்கிறோம். எத்தனை தடைகள் வந்தாலும், அதை தடுத்தெறிந்து வெற்றி பெற வேண்டும் என உறுதியாக போட்டியிட்டோம். ஆனால், பணப்பட்டுவாடா செய்து, எங்கள் வெற்றியை பறித்து விட்டனர்.

மேற்கண்ட 3 தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா செய்யாமல், நேர்மையாக தேர்தலை நடத்தி இருந்தால், பாஜக நிச்சயம் வெற்றி பெற்று இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

குடும்பங்களை சீரழிப்பதில் சாதனை படைத்த திமுக அரசு...! 4 நாட்களில் ரூ.850 கோடி மது விற்பனை.. அன்புமணி
ராமதாஸ் தான் தலைவர்... அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அல்ல - பாமக சட்ட ஆலோசகர்