ஆரோவிலுக்கு விஜயம் செய்த இந்தியன் வங்கி உயர்மட்ட பிரதிநிதிகள்; என்ன காரணம் தெரியுமா?

Published : May 27, 2025, 07:20 PM ISTUpdated : May 27, 2025, 09:00 PM IST
Bank of India representatives visited Auroville Foundation

சுருக்கம்

புதுச்சேரி இந்தியன் வங்கியின் உயர்மட்ட பிரதிநிதிகள் ஆரோவில் அறக்கட்டளையின் செயல்துறை அதிகாரி (OSD) டாக்டர் ஜி. சீதாராமனை சந்தித்து நட்பு உரையாடல் நடத்தினர்.

Indian Bank representatives visited Auroville Foundation : புதுச்சேரியில் இருக்கும் நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சியாக, இந்தியன் வங்கியின் உயர்மட்ட பிரதிநிதிகள் ஆரோவில் அறக்கட்டளைக்கு சென்று, அதன் தனித்துவமான நிதி முறைமைக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட வங்கி தீர்வுகளை பற்றி ஆலோசித்தனர்.

ஆரோவில் அறக்கட்டளையின் செயல்துறை அதிகாரி (OSD) டாக்டர் ஜி. சீதாராமனை, புதுச்சேரி மண்டல மேலாளர் வெங்கட சுப்பிரமணியன் தலைமையில், மணிராஜ் (மண்டல முதன்மை மேலாளர்) மற்றும் விவேக் ஹசாரி (கிளை மேலாளர்) ஆகியோர் சந்தித்து நட்பு உரையாடல் நடத்தினர்.

இந்த சந்திப்பில், இந்தியன் வங்கி உயர்மட்ட பிரதிநிதிகள், ஆரோவில் அறக்கட்டளையின் தனித்துவமான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஃபின்டெக்-ஆதாரித்த தனிப்பயன் வங்கி மாதிரியை குறித்து பேசினர். அதில் அறக்கட்டளை ஊழியர்களுக்கான சம்பளத் தொகுப்பு, முழுமையான மற்றும் மதிப்பு கூட்டிய வங்கி சேவைகளை வழங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து முக்கியமாக விவாதித்தனர்.

அதுமட்டுமின்றி, ஆரோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படும் MSME (சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்) மற்றும் தன்னார்வ தொழில் குழுக்கள் (SHGs) ஆகியவற்றின் நிதி மேம்பாடுகள் குறித்தும் விவாதித்தனர்.

மேலும் இந்த சந்திப்பில், டாக்டர் ஜி. சீதாராமனை ஆரோவில் அறக்கட்டளையின் செயலாளர் டாக்டர் ஜெயந்தி எஸ். ரவி தலைமையில், அன்னை மற்றும் ஸ்ரீ அரவிந்தரின் கனவை நிறைவேற்றுவதற்காக கல்வி நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தங்கள் (MoUs) மற்றும் ஒத்துழைப்புகள் மூலம் முன்னெடுக்கப்படும் முயற்சிகள் குறித்து விளக்கினர்.

கூடுதலாக, உயிரியல் மண்டலம் மற்றும் ஆரோவிலில் செயல்படும் கைவினைத் தொழில்கள், சிறுதொழில் அலகுகள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு MSME மற்றும் ஸ்டார்ட்அப் திட்டங்கள் மூலம் தேவையான ஆதரவை வழங்குவதற்கான அறக்கட்டளையின் முயற்சிகள் குறித்தும் டாக்டர் ஜி. சீதாராமன் விளக்கமளித்தார்.

இந்த சந்திப்பானது, ஆரோவிலின் வளர்ச்சி நோக்கங்களுடன் நிதிச் சேவைகளை இணைப்பதற்கான ஒரு முக்கியமான படி. இது பொருளாதார வலுவூட்டல் மற்றும் சமூக மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அமைதியும், நம்பிக்கையும் மிகுந்த தமிழ்நாட்டைக் கண்டு பாஜக ஏன் பயப்படுகிறது? அமைச்சர் கேள்வி
கோவை லேடிஸ் ஹாஸ்டலில் அதிர்ச்சி! மாடியில் இருந்து குதித்த இளம்பெண்ணின் நிலை என்ன? இதுதான் காரணமாக?