சிக்கித் திணறும் சுகேஷ் சந்திரசேகர் - பிணையில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிப்பு

 
Published : Apr 28, 2017, 05:27 PM ISTUpdated : Sep 19, 2018, 03:13 AM IST
சிக்கித் திணறும் சுகேஷ் சந்திரசேகர் - பிணையில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிப்பு

சுருக்கம்

arrest warrant on sukesh chandra

இரட்டை இலை லஞ்ச வழக்கில் நீதிமன்றக் காவலில் அடைகத்கப்பட்டிருக்கும் சுகேஷ் சந்திரசேகரருக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டை சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இரட்டை இலை சின்னம் பெற இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகரின் போலீஸ் காவல் நிறைவடைந்ததை அடுத்து அவரை மே 12 ஆம் தேதி வரை காவலில் அடைக்க டெல்லி மாவட்ட நீதிமன்றம் இன்று பிற்பகலில் உத்தரவு பிறப்பித்தது.

இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே அவருக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டை சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. கனரா வங்கியில் 19.22 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இந்த அதிரடி உத்தரவை நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. 

இரட்டை இலை லஞ்ச வழக்கில் வலுவான ஆதாரங்களை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் சேகரித்து வரும்நிலையில், மோசடி வழக்கில் பிணையில் வரமுடியாத பிடிவாரண்டும் சுகேஷூக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

பிச்சைக்காரனா நீ.?? உயிர் நாடியில் எட்டி உதைத்தார் சவுக்கு சங்கர்! புகார் கொடுத்த தயாரிப்பாளர் பகீர் விளக்கம்
கதறிய 9ம் வகுப்பு பள்ளி மாணவன்.. ஓயாமல் 4 பேர் டார்ச்சர்.. கட்டாய ஓரின**சேர்க்கையால் அதிர்ச்சி!