வாக்காளர் பட்டியலில் 3 முறை இடம் பிடித்த அதிமுக வாக்காளர்…

 
Published : Oct 08, 2016, 01:13 AM ISTUpdated : Sep 19, 2018, 12:56 AM IST
வாக்காளர் பட்டியலில் 3 முறை இடம் பிடித்த அதிமுக வாக்காளர்…

சுருக்கம்

மாமல்லபுரம் பேரூராட்சியில் அதிமுக கவுன்சிலரின் பெயர் வாக்காளர் பட்டியலில் வெவ்வேறு பகுதிகளில் மூன்று முறை இடம்பெற்றிருந்தது. இதையடுத்து கூடுதலாக இடம் பெற்றவற்றை கோட்டாட்சியர் இரத்து செய்தார்.

மாமல்லபுரம் ராஜீவ்காந்தி சாலையில் வசித்து வருபவர் பூங்குழலி பெரியார். இவர், மாமல்லபுரம் பேரூராட்சி 8-ஆவது வார்டு கவுன்சிலராக உள்ளார். இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் இதே வார்டில், அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடுவதற்காக தேர்தல் அலுவலரிடம் பூங்குழலி மனுதாக்கல் செய்தார்.

கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையின் போது (தேர்தல் ரத்து அறிவிப்பு வரும் முன்), வாக்காளர் பட்டியலில் பூங்குழலியின் பெயர் 3 இடங்களில் பதிவாகி இருப்பதாக சிலர் ஆட்சேபணை தெரிவித்தனர்.

இந்த நிலையில், இதுகுறித்து செங்கல்பட்டு கோட்டாட்சியரிடம் பூங்குழலி மனு அளித்தார். இதைத்தொடர்ந்து, பிற பகுதிகளில் தவறுதலாக இடம்பெற்றிருந்த பூங்குழலியின் பெயரை கோட்டாட்சியர் ரத்து செய்து அறிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!