பள்ளி மாணவியை கர்பமாக்கிவிட்டு எஸ்கேப் ஆன மாணவன்... பலமுறை உல்லாசமாக இருந்துவிட்டு கழட்டிவிட்ட கொடுமை!

First Published Apr 19, 2018, 6:18 PM IST
Highlights
A student of love with a plus 1 student was arrested


பிளஸ் 1 மாணவியை அதேவகுப்பில் இருக்கும் மாணவர் ஒருவர் காதலித்து பலமுறை உல்லாசம் அனுபவித்து விட்டு ஏமாற்ற நினைத்திருக்கும் வேளையில் கர்ப்பமானதால்  தப்பியோடிய மாணவனை வலைவீசி தேடி வருகின்றனர்.

சென்னை அனகாபுத்தூரில் அரசு மேல்நிலை பள்ளியில்   அதே பகுதி கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 17 வயது மாணவி பிளஸ் 1ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் அனகாபுத்தூர், பெரியார் நகர் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவனும் பிளஸ் 1 படித்து வருகிறார்கள். ஒரே பள்ளியில் படித்த இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த வருடம் அக்டோபர் மாதம் மாணவியின் வீட்டில் அவரது பெற்றோர்கள் வெளியில் சென்றுள்ளனர். அப்போது வீட்டில் மாணவி தனியாக இருப்பதை அறிந்த மாணவன் அங்கு சென்று மாணவியிடம் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த மானவியில் பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் அடிக்கடி வெட்டிற்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளான். இதனால் மாணவி கர்ப்பமடைந்தார்.

5 மாத கர்ப்பமாக மாணவி இருந்த விஷயம் அவரது தாயாருக்கு சமீபத்தில் தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் வெளியில் தெரிந்தால் அவமானமாகிவிடும் என்று கருவை கலைத்து விட முடிவு செய்து சென்னை திருவல்லிகேணியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துசென்றுள்ளார். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர் 5 மாத கர்ப்பமாக இருப்பது குறித்து சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்த போலீசார் மாணவி மற்றும் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அதில், மாணவன் காதலித்து கர்ப்பமாக்கிய விபரத்தை மாணவி தெரிவித்தார். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றினர். அதன்பேரில், அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளி மாணவனை கைது செய்தனர்.

click me!