கள்ளக்காதல்  உறவு தொடர செம ஐடியா பண்ணிய பெண்...... 15 வயது மகளை காதலனுக்கு கல்யாணம் செய்து வைத்த கொடூர தாய்… 

 
Published : Jun 09, 2018, 11:05 AM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
கள்ளக்காதல்  உறவு தொடர செம ஐடியா பண்ணிய பெண்...... 15 வயது மகளை காதலனுக்கு கல்யாணம் செய்து வைத்த கொடூர தாய்… 

சுருக்கம்

A lady maariage her daughter with lover

அரியலூரைச் சேர்ந்த பெண் ஒருவர் கள்ளக் காதலனுடன் உறவை தொடர தனது சொந்த 15 வயது மைனர் மகளை கள்ளக் காதலனுக்கு திருமணம் செய்துள்ளார். தனது கணவன் மற்றும் தாயின் கள்ளக் காதலை அறிந்த அந்த சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில்  தாய்  கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் தா.பொட்டக்கொல்லையை அடுத்துள்ள  வடகடல் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியா. கருத்து வேறுபாடு காரணமாக இவர்  கணவனைப் பிரிந்து தனது 15 வயது மகளுடன் வசித்து வந்தார். சத்தியாவுக்கும்  இவரது உறவினரான ராஜ் என்பவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்துள்ளது.  

இந்நிலையில் கள்ளத் தொடர்பு வெளியில் தெரியாமல் இருக்க சத்தியாவின் மூளையில் ஒரு ஐடியா தோன்றியுள்ளது. அதன்படி  15 வயதே நிரம்பிய தனது மைனர் மகளை  கடந்த 2016 ஆம் ஆண்டு  ராஜுவுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். 

மூவரும் ஒரே வீட்டில் குடியிருந்ததால் சத்தியா மற்றும் ராஜுவின் கள்ளக்காதல் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் தொடர்ந்தது.

இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் தனது தாய் சத்யாவுக்கும், கணவர் ராஜுக்கும் உள்ள தொடர்பு தெரியவந்ததை அடுத்து மனமுடைந்து மைனர் பெண் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.  

இதனை அடுத்து மைனர் பெண்ணை அவரது தாயார் சத்யாவும், சத்யாவின் தாய் சாந்தியும் கள்ளத் தொடர்பை வெளியே சொல்லகூடாது எனவும், மீண்டும் ராஜூவிடம் சேர்ந்து வாழ வேண்டும் எனவும் கூறி அந்த  மைனர் பெண்ணை சூடு வைத்து கொடுமை படுத்தி உள்ளனர்.

கொடுமை தாங்காத மைனர் பெண் ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அறித்தார்.  இதையடுத்து தாய் சந்தியா, சந்தியாவின் தாய் சாந்தி, மைனர் பெண்ணின் கணவன் ராஜ் மற்றும் அவரது தாய் மாரியம்மாள் ஆகியோர் மீது போலீசார்  வழக்கு பதிவு செய்து   நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

PREV
click me!

Recommended Stories

நாகூர் ஹனீபாவும், கலைஞரும் நகமும், சதையுமாக இருந்தனர்.. முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சி பேச்சு
திட்டக்குடி அருகே அரசு பேருந்து டயர் வெடித்து கோர விபத்து! 7 பேர் உடல் நசுங்கி பலி!