“வேறு ஒரு பையனை காதலித்த காதலி”... கத்தியால் சரமாரியாக குத்திய காதலன்... சென்னையில் பயங்கரம்!

First Published Feb 21, 2018, 2:59 PM IST
Highlights
A girlfriend who loves another boy kilid lover


கடந்த 7 ஆண்டு கால காதலை உதறியதால் தனது காதலியை சரமாரியாக கத்தியால் குத்திய காதலன், தானும் தனக்கு கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

சென்னை அண்ணாநகரில் உள்ள டவர் பூங்கா பூங்காவில் காதலர்கள் முதல் முதியவர்கள் வரை வந்து செல்வதால் எப்போதுமே பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், நேற்று மதியம் காதல் ஜோடி ஒன்று வந்தது. இந்த ஜோடி தனியாக பேசிக் கொண்டிருந்தனர். திடீரென இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டனர்.

பூங்காவுக்கு வந்த பொது மக்கள், இது காதலர்களுக்கிடையே நடக்கும் வழக்கமான பிரச்னை என்று நினைத்து சென்றுள்ளனர். இந்த ஜோடி ஒரு கட்டத்தில் வாலிபர் தனது காதலியின் தலைமுடியை பிடித்து கடுமையாக தாக்கினார்.  அப்போது யாரும் எதிர்பார்க்காத நிலையில், ஏற்கனவே தயாராக எடுத்து வந்த கத்தியை எடுத்து தனது காதலியின் இரண்டு மார்பு பகுதிகளில் குத்தினார். அவர் ரத்த வெள்ளத்தில் அலறிக்கொண்டு வலி தாங்க முடியாமல் ஓடினார்.

ஆனால் ஆத்திரம் தீராத வாலிபர் காதலியின் கழுத்து மற்றும் வயிறு, நெஞ்சு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் உதவி கேட்டபடி கீழே விழுந்தார்.  

இந்த சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து அங்கும், இங்கும் ஓடினர். உடனே வாலிபர், தனது காதலியை குத்திய கத்தியாலேயே தனக்கு தானே குத்திக்கொண்டு ரத்த வெள்ளத்தில் விழுந்தார். அப்போது ஓடி வந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு வெவ்வேறு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ரத்தம் அதிகமாக வெளியேறியதால் இளம்பெண் தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அண்ணா நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சரவணன் சம்பவ இடத்திற்கு சென்று கத்திக்குத்து சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்களிடம் விசாரணை நடத்தி வந்தனர்.  இந்த பயங்கரமான சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது; இளம்பெண்ணை கத்தியால் குத்திய நபர் சென்னை சோழவரத்தை அடுத்த செம்புலிவரம் என்ற ஊரைச் சேர்ந்த  ராஜேஷ்.

இவர், இன்ஜினியரிங் முடித்து விட்டு தற்போது கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த ஒரு வருடமாக வேலை செய்து வந்துள்ளார். தனது பள்ளியில்  உடன் படித்த செங்குன்றம் எம்.ஏ. நகரை சேர்ந்த நிவேதா என்பவரை காதலித்துள்ளார். பின்னர், பள்ளி பருவத்தில் தொடங்கிய காதல் கல்லூரி படிப்பிலும் தொடர்ந்துள்ளது.

ராஜேஷ் இன்ஜினியரிங் படிப்பு முடிந்த உடன், கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அதேபோல நிவேதாவும் பட்டப்படிப்பு முடிந்து தற்போது அண்ணா நகரில் உள்ள பெண்கள் கல்லூரியில் MCC  இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். 7 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், ராஜேஷ் வேலைக்கு சென்ற பிறகு இருவருக்கும் இடையே சற்று விரிசல் ஏற்பட்டது. ராஜேஷ் வேலை செய்யும் இடத்தில் ஒரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.

இதனால் அவர் சரியாக நிவேதாவிடம் பேசாமல் அலைக்கழித்து வந்துள்ளார். எப்போது பேசினாலும் தனக்கு அதிக வேலை இருப்பதாக கூறி செல்போன் இணைப்பை துண்டித்து விடுவார் ராஜேஷ். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த நிவேதாவுக்கு, ராஜேஷ் வேலை பார்க்கும் இடத்தில் வேறு ஒரு பெண்ணிடம் பழகி வந்தது தெரியவந்தது.

எனவே, ஆத்திரமடைந்த நிவேதா கடந்த 2 மாதத்திற்கு முன்பு இதுபற்றி தனது காதலன் ராஜேஷிடம் கேட்டுள்ளார். அதற்கு ராஜேஷ், முறையாக பதில் அளிக்க வில்லை. இதற்கிடையே, நிவேதா தனது காதலன் நடவடிக்கை குறித்து தனது ஆண் நண்பருடன் கூறியுள்ளார். மனமுடைந்த நிலையில் இருப்பதால் நிவேதா, தனது ஆண் நண்பருடன் வெளியே சென்று வந்துள்ளார். 

ஒரு கட்டத்தில் நிவேதா தனது ஆண் நண்பருடன் நெருங்கி பழங்கி வந்துள்ளார் அது காதலாக மாறியுள்ளதாம். இவர்கள் வெளியில் சுற்றுவதை, ராஜேஷிடம் அவரது நண்பர்கள் புகைப்பட ஆதாரத்துடன் கூறியுள்ளனர். அப்போது கோவையில் இருந்த ராஜேஷ் நிவேதாவை செல்போனில் தொடர்பு கொண்டு கண்டித்துள்ளார்.

அப்போது நிவேதா, நீ என்னை மறந்து வேறு ஒரு பெண்ணுடன் ஊரை சுற்றி வருவது போல் நானும் சுற்றி வருகிறேன் என்று கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த ராஜேஷ், கடந்த 7 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்த தனது காதலி வேறு ஒருவருடன் சுற்றி வருவதால் அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

அதன்பிறகு இரண்டு நாட்களுக்கு முன் ராஜேஷ் தனது காதலி நிவேதாவுக்கு போன் செய்து, நான்  சென்னை வந்துள்ளேன். உன்னை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது, எனக்கு அதிக வேலை இருக்கு. அப்புறம் பார்க்கலாம் என போனை கட் செய்திருக்கிறார்.

இதனையடுத்து ராஜேஷ் விடாமல் செல்போனில் தொடர்பு கொண்டு நிவேதாவிடம் பேசியுள்ளார். அப்போது இருவரும் பிரிந்து விடுவோம். நான் உனக்கு கொடுத்த காதல் பரிசை நீ எனக்கு திரும்ப கொடுத்து விடு, அதேபோல் நீ எனக்கு கொடுத்த காதல் பரிசை நான் கொடுத்து விடுகிறேன் என்று கூறியுளார். அதற்கு நிவேதா சம்மதம் தெரிவித்துள்ளார். அப்போது இருவரும் அண்ணா நகர் டவர் பூங்காவில் சந்தித்து பரிசு பொருட்களை திரும்ப கொடுப்பதாக முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, ராஜேஷ் தனது காதலியை கொலை செய்ய முடிவு செய்து கோவையில் இருந்து நேற்று சென்னை வந்துள்ளார். பின்னர் காதலியை கொலை செய்வதற்காக கடையில் கத்தி வாங்கிக்கொண்டு நேற்று மதியம் டவர் பூங்காவிற்கு வந்துள்ளார். நிவேதாவும் டவர் பூங்காவிற்கு வந்தார். அப்போது, இருவரும் சந்தித்தனர்.

சிறிது நேரத்தில் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி தகராறில் ஈடுபட்டனர். உடனே ஏற்கனவே தயாராக கொண்டு வந்த கத்தியால் தனது காதலியை குத்தி விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

click me!