டாஸ்மாக் லாரியில் வெடிகுண்டு விவகாரம் - சிக்கிய கார் யாருடையது என கண்டுபிடிப்பு

 
Published : May 01, 2017, 05:10 PM ISTUpdated : Sep 19, 2018, 03:13 AM IST
டாஸ்மாக் லாரியில் வெடிகுண்டு விவகாரம் - சிக்கிய கார் யாருடையது என கண்டுபிடிப்பு

சுருக்கம்

a car caught in grenade case

திருவாரூரில் வெடிகுண்டு எடுக்கப்பட்ட சம்பவத்தில் பிடிபட்ட கார் யாருடையது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் விளமல் பகுதியில் அரசு மதுபான கிடங்கு செயல்பட்டு வருகிறது. லாரிகள் மூலம் அரசு மதுபான கடைகளுக்கு மதுபாட்டில்கள் இறக்குவது வழக்கம்.

அதன்படி விளமல் பகுதியில் உள்ள அரசு மதுபான கடைக்கு இறக்குவதற்காக லாரியில் மதுபான பாட்டில்கள் ஏற்றிச் செல்லப்பட்டது.

சரக்கை இறக்கிக் கொண்டிருந்த போது லாரியில் வெடிகுண்டு இருப்பதை கண்டு மதுபான கடையில் வேலை செய்யும் பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் லாரியுடன் வந்த மோகன் மற்றும் ராஜ்குமார் ஆகிய 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் தப்பிச் சென்றுவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வெடிகுண்டு எடுக்கப்பட்ட சம்பவத்தில் கார் ஒன்று போலீசாரிடம் சிக்கியது. இந்த கார் தற்போது யாருடையது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சித்தாலபாக்கம் பகுதியை சேர்ந்த ரவி என்பவருடைய கார் என கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  

PREV
click me!

Recommended Stories

அந்த முட்டாளுக்கு தான் சொல்லுறேன் திமுக ஆட்சிக்கு வந்து செஞ்ச முதல் ஊழல் இதுதான் - ஹெச்.ராஜா பேட்டி
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு! பழனிசாமியின் பக்கா பிளான்!