4 போலி மருத்துவர்கள் கைது - போலீசார் அதிரடி...

Asianet News Tamil  
Published : May 05, 2017, 09:14 PM ISTUpdated : Sep 19, 2018, 03:14 AM IST
4 போலி மருத்துவர்கள் கைது - போலீசார் அதிரடி...

சுருக்கம்

4 pseudo-doctors arrested - police action

தானிப்பாடி பகுதியில் போலி மருத்துவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.

திருவண்ணாமலை அருகே உள்ள தானிப்பாடி பகுதியில் சிலர் போலியாக மருத்துவம் பார்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், மருத்துவர்கள் வழங்கும் மருந்துகளும் படிப்பு சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டன.

அப்போது, சவுந்திரராஜன், சையது மதர்ஷா, கிருஷ்ணவேணி, குமரேஷன் ஆகியோரது சான்றிதழ்கள் போலி என தெரிய வந்தது.

இதைதொடர்ந்து அவர்கள் 4 போரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

அனல் பறந்த 2026 சட்டமன்றம் | முதலமைச்சர் விஜய்-ன் அறிவிப்புகளை ஆதாரங்களுடன் துவம்சம் செய்த உதயநிதி !
Ration Card: ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட்: இனி எந்த கடையிலும் பொருட்கள் வாங்கலாம்.. ஏடிஎம் போல மாறும் சிஸ்டம்!