பைக் திருடனுக்கு 20 மாத சிறை தண்டனை - இரண்டு வருட விசாரணையின் முடிவில் நீதிபதி அதிரடி தீர்ப்பு...

 
Published : May 05, 2018, 08:13 AM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
பைக் திருடனுக்கு 20 மாத சிறை தண்டனை - இரண்டு வருட விசாரணையின் முடிவில் நீதிபதி அதிரடி தீர்ப்பு...

சுருக்கம்

20 months jail sentence for bike thief - Judge order two years verdict

திருச்சி

திருச்சியில் மோட்டார் சைக்கிள் திருடியவருக்கு 20 மாதம் சிறை தண்டனை விதித்து இரண்டு வருட விசாரணையை முடித்துவைத்தார் நீதிபதி.

திருச்சி கே.கே.நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புதுக்கோட்டை பிரதான சாலையில் ஜெயில் கார்னர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (50). இவர் கடந்த 4.7.2016 அன்றிரவு தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது அவரது வண்டியை காணவில்லை.

இதுகுறித்து கண்ணன் கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், மோட்டார் சைக்கிளை திருடியவரை பிடிக்க காவல் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

அந்த விசாரணையில், மோட்டார் சைக்கிளை திருடியவர் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கிலாப்பூர் ஜீவாநகரைச் சேர்ந்த கருணாநிதி மகன் பாபுஜான் (26) என்பது தெரியவந்தது.

இந்த நிலையில் திருச்சி கே.கே.நகர் காவலாளர்களால் தேடப்பட்டுவந்த பாபுஜானை, வடகாடு காவலாளர்கள் 28.7.2016 அன்று மற்றொரு வழக்கில் கைது செய்தனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், திருச்சி கே.கே.நகர் காவல் எல்லையில் மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் பாபுஜான் கைது செய்யப்பட்டார். மேலும், திருடப்பட்ட மோட்டார் சைக்கிளையும் காவலாளர்கள் மீட்டனர்.

பாபுஜான் மீதான வழக்கு விசாரணை திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-2 நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, தொடர்ந்து நடந்து வந்த வழக்கின் விசாரணை நேற்று முடிந்தது. 

விசாரணையின் முடிவில், "மோட்டார் சைக்கிள் திருடியதற்காக பாபுஜானுக்கு 20 மாத சிறை தண்டனை விதிக்கப்படுகிறது" என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

PREV
click me!

Recommended Stories

நான் மதுரை கமிஷனராக இருந்திருந்தால்! CM ஸ்டாலினுக்கு மெயில் அனுப்பிவிட்டு! பொன் மாணிக்கவேல் பரபரப்பு
சாலையில் சென்ற பெண் மீது மோதி! அடுத்த நொடியே கவிழ்ந்த ஆட்டோ! பயணிகள் நிலை என்ன? பதற வைக்கும் வீடியோ!