நெல்லையில் 144 தடை உத்தரவு – போலீஸ் அதிரடி!

By manimegalai aFirst Published Sep 22, 2018, 2:13 PM IST
Highlights

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் கடந்த 13ம் தேதி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இருதரப்பிரனர் இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இதனால், செங்கோட்டையில் ஒருநாள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டது.

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் கடந்த 13ம் தேதி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இருதரப்பிரனர் இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இதனால், செங்கோட்டையில் ஒருநாள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டது.

அப்போது, விநாயகர் சிலைகள் தண்ணீரில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துவரபட்டது. அங்கு மீண்டும் மோதல் ஏற்பட்டதால், போலீசார் தடியடி நடத்தி அனைவரையும் கலைத்தனர். இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலை அனைத்தும் குண்டாற்றில் கரைக்கப்பட்டது.

இந்நிலையில் மறுநாள் இருதரப்பினரிடமும் கலெக்டர் ஷில்பா தலைமையில், தென்மண்டல ஐஜி சண்முகராஜேஸ்வரன், நெல்லை மாவட்ட எஸ்பி அருண்சக்திகுமார் மற்றும் வருவாய் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் மீண்டும் 144 தடை உத்தரவு தென்காசி, செங்கோட்டையில் ஏற்பட்ட சம்பவங்களை தொடர்ந்து செங்கோட்டை, தென்காசி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 15-ந் தேதி மாலை 8 மணி முதல் இன்று 22-ந் தேதி காலை 6 மணி வரை தொடரும் என கலெக்டர் உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து செங்கோட்டை நகரை சுற்றி 9 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பிற்கு பின்னர் அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப்பட்டு வந்தன. மேலும் தென்மண்டல ஜஜி சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டனர்.

இந்நிலையில் இன்று காலையுடன் முடிவடையும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது செங்கோட்டை நகராட்சி, புதூர், பண்பொழி, வல்லம், பிரானூர் பார்டர், பெரிய பிள்ளை வலசை, கற்குடி, புளியரை, சுமை தீர்த்தபுரம், தெற்கு மேடு, தேன் பொத்தை, கணக்குபிள்ளை வலசை ஆகிய பஞ்சாயத்துகளில் இன்று காலை 6 மணி முதல் வரும் 30ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் பொதுக்கூட்டம் - போராட்டம் நடத்துவதற்கும் வேறு எவ்வித ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் எந்த இடத்திலும் மேற்குறிய நோக்கத்திற்காக 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒன்றாக கூடுவதற்கும் வன்முறை தூண்டுவதற்காக ஆயுதங்களோ பிற பொருட்களையோ வைத்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ஏடிஎஸ்பிக்கள் தனபாலன், முகமது அஸ்லாம் ஆகியோர் தலைமையில் ஏஎஸ்பிக்கள் மணிகண்டன், வெற்றி செல்வன், பழனிகுமார் மற்றும் 8 இன்ஸ்பெக்டர்கள், 16 எஸ்ஐக்கள் உள்பட 500க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே 9 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் ரெயில்வே கேட் அருகே கூடுதலாக ஒரு சோதனை சாவடி அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

click me!