'அப்பா கூட போக மாட்டேன்.. அவனை தான் கல்யாணம் பண்ணுவேன்'.. அடம் பிடித்த இளம்பெண்.. அட்வைஸ் செய்த நீதிபதிகள்!!

Published : Sep 06, 2019, 10:52 AM ISTUpdated : Sep 06, 2019, 10:59 AM IST
'அப்பா கூட போக மாட்டேன்.. அவனை தான் கல்யாணம் பண்ணுவேன்'.. அடம் பிடித்த இளம்பெண்.. அட்வைஸ் செய்த நீதிபதிகள்!!

சுருக்கம்

திருநெல்வேலியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தந்தையுடன் போக மறுத்து 21 வயது நிரம்பாத காதலனை திருமணம் செய்வதாக கூறியதால் நீதிபதிகள் அறிவுரை கூறினர்.

 
இதனிடையே குமார் சமீபத்தில் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தனது மகள் பட்டப்படிப்பு முடிக்காத நிலையில் அவருக்கு திருமணம் செய்ய கூடாது என்றும் காதலனிடம் இருந்து அவரை மீட்டு தருமாறு குறிப்பிட்டிருந்தார்.
 
விசாரணை நடத்திய நீதிபதிகளிடம் பேபிகலா, படிப்பை தொடர விருப்பம் இருந்தாலும் தந்தையுடன் போக மாட்டேன் என்று தெரிவித்தார்.
 
இதை தொடர்ந்து பேசிய நீதிபதிகள் வைத்யநாதன், ஆனந்த் சர்மா பேபிகலா 18 வயது பூர்த்தி அடைந்தவர் என்பதால் திருமணம் குறித்து முடிவெடுக்க அவருக்கு உரிமை இருக்கிறது. ஆனால் அவரது காதலன் இன்பசத்யாவிற்கு 19 வயது தான் ஆகுவதாக குறிப்பிட்ட நீதிபதிகள் சட்டப்படி ஆண்கள் 21 வயதில் தான் திருமணம் செய்ய முடியும் என்றனர்.
 
2 ஆண்டுகளுக்கு பேபிகலா விடுதியில் தங்கி படிப்பை தொடர வேண்டும் என்றும் அதற்கு பிறகு திருமணம் குறித்து யோசியுங்கள் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கினர். மேலும் அவரது தந்தை விரும்பும் பட்சத்தில் திருமணம் குறித்து இன்பசத்யாவின் பெற்றோருடன் பேசி முடிவெடுக்கலாம் என்று உத்தரவிட்டனர்.

PREV
click me!

Recommended Stories

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று 5 முதல் 8 மணிநேரம் வரை மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
ப்ளீஸ் என்ன விட்டுடு! இனி இப்படி செய்யமாட்ட கதறிய ஸ்ரீபிரியா! விடாத பாலமுருகன்! நடந்தது என்ன? பகீர் வாக்குமூலம்