தலைக்குப்புற கார் கவிழ்ந்து விபத்து.. ரத்த வெள்ளத்தில் 4 பேர் உயிரிழப்பு... 11 பேர் படுகாயம்..!

Published : Nov 08, 2020, 06:31 PM IST
தலைக்குப்புற கார் கவிழ்ந்து விபத்து.. ரத்த வெள்ளத்தில் 4 பேர் உயிரிழப்பு... 11 பேர் படுகாயம்..!

சுருக்கம்

ஈரோடு அருகே மலைப்பகுதி சாலையில் கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

ஈரோடு அருகே மலைப்பகுதி சாலையில் கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தம்புரெட்டிமலை கிராமத்தை சேர்ந்த 15 பேர் வட்டகாடு என்ற இடத்திற்கு தோட்ட வேலைக்கு வாடகை டாட்டா சுமோ காரில் இன்று காலை 7 மணியளவில் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது, மலைசாலையில் உள்ள இறக்கத்தில் கார் இறங்கிய போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. 

பின்னர், சாலையோரமுள்ள மண் பகுதியில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தேவராஜ், சிக்கணன், தொட்டப்பி, ஜோகன் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். 11 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 4 பேர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

PREV
click me!

Recommended Stories

விஜய்யின் வளர்ச்சியை 28 வருடங்களுக்கு முன்பே கணித்து ஆரூடம் சொன்னவர்... யார் இந்த மோகன்ராஜ்?
உதயநிதி இளம் பெரியாரா? பெரியார் ஸ்பெல்லிங் தெரியுமா அவருக்கு? ஆதவ் அர்ஜுனா ஆவேச பேச்சு