
திண்டுக்கல்லை அடுத்த வேடப்பட்டியில் அமைந்துள்ள பாலா நகரைச் சார்ந்தவர் வேளாங்கண்ணி ராஜ் (வயது 44). இவர் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவரது மனைவி குழந்தை தெரசா (வயது 45). இவர்களுக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் மகளும், ஆறாம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர். திண்டுக்கல் அருகே உள்ள முன்னிலை கோட்டையைச் சார்ந்த சின்னன் (என்ற) சந்தியாகு என்பவரிடம் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயும், பொன்னிமாந்துறையைச் சார்ந்த சேசு சந்திரசேகர் என்பவரிடம் ஒருலட்சம் ரூபாயும் கடனாக வாங்கிய வேளாங்கண்ணி ராஜா இதில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை திரும்ப செலுத்த முடியாமல் தவித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 18ம் தேதி இவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் வேளாங்கண்ணி ராஜுவை அடித்து இழுத்து சென்றதாக கூறப்படுகிறது. அன்று முதல் இன்றுவரை தனது கணவன் வீடு திரும்பாததால் அவரது மனைவி குழந்தை தெரசா "தனது கணவனை மீட்டு தரக்கோரி" மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், திண்டுக்கல் தாலுகா காவல் நிலையம், அம்பாத்துரை காவல் நிலையம் ஆகிய இடங்களில் மனு அளித்தும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மனம் உடைந்த குழந்தை தெரசா இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது மகன் மற்றும் மகளுடன் வந்தார்.
திடீரென தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து அதிலிருந்து பெட்ரோலை தனது மீதும் தனது மகள் ரிவீனா மேரி மற்றும் மகன் ஸ்டீபன் ஆகியோர் மீதும் ஊற்றி மூவரும் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சித்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை உடனடியாக தடுத்து நிறுத்தி மீட்டு தொடர் விசாரணை நடத்தினர்.
குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற மாணவி; தேடி சென்று வாழ்த்திய ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மனு கொடுக்க வருபவர்கள் உடலில் மண்ணெண்ணெய் பெட்ரோல் உள்ளிட்டவற்றை ஊற்றி தற்கொலை செய்ய முயற்சித்தால் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த வாரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இன்று தாய் தனது கணவனை மீட்டு தர கோரி தன் இரு குழந்தைகளுடன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காவலர்கள் கண்முன்னே விஷமருந்தி விவசாயி பலி; கை கட்டி வேடிக்கை பார்த்த ஆய்வாளர்