பிரசவத்தின்போது தாய் சேய் உயிரிழப்பு... கட்டிப்பிடித்து கதறிய கணவர்..!

By vinoth kumarFirst Published Aug 4, 2019, 4:38 PM IST
Highlights

தருமபுரி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் பிரசவத்தின்போது தாயும்- சேயும் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தருமபுரி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் பிரசவத்தின்போது தாயும்- சேயும் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தர்மபுரி மாவட்டம், செங்கோடியை சேர்ந்தவர் காந்தி. இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 11 மாதத்திற்கு முன்பு ஜோதி (23) என்ற பெண்ணை திருமணம் செய்தார். தற்போது ஜோதி நிறைமாத கர்ப்பணியாக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை ஜோதிக்கு திடீரென்று பிரசவ வலி அதிகமாக ஏற்பட்டது. 

உடனே அவரை பிரசவத்திற்காக அவரது கணவர் காந்தி தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அங்கு நேற்று மாலை மருத்துவர்களால் ஜோதிக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. அப்போது ஜோதிக்கு பெண் குழந்தை இறந்த நிலையில் பிறந்தது. சற்று நேரத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக ஜோதியும் பரிதாபமாக உயிரிழந்தார். ஜோதி மற்றும் வயிற்றிலேயே இறந்து பிறந்த பெண் குழந்தையின் உடல்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த காந்தி கதறி அழுதார். 

இது குறித்து காவல் நிலையத்தின் கணவர் புகார் அளித்தார். அதில், எனது மனைவிக்கு மருத்துவர்கள் சரியான முறையில் சிகிச்சை அளிக்காததாலும், அவர்களின் அலட்சியதாலும் தான், எனது மனைவி மற்றும் குழந்தையின் இறப்புக்கு காரணம் கூறியிருந்தார். அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதனையடுத்து, ஆத்திரமடைந்த உறவினர்கள் 200-க்கும் மேற்பட்டோர் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு இன்று காலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர். 

click me!