ஐயோ கடவுளே... கொரோனாவால் மகன் இறந்த அதிர்ச்சி.. நெஞ்சை பிடித்துக்கொண்டே உயிரை விட்ட தாய்..!

Published : May 26, 2021, 05:55 PM IST
ஐயோ கடவுளே... கொரோனாவால் மகன் இறந்த அதிர்ச்சி.. நெஞ்சை பிடித்துக்கொண்டே உயிரை விட்ட தாய்..!

சுருக்கம்

கோவையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த மகன் இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் தாய் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த மகன் இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் தாய் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் நீலிகோணம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (48). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். இவரது 71 வயது தாயாரை அவர் தனது வீட்டில் வைத்து கவனித்து வந்துள்ளார். 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பால்ராஜூக்கு திடீரென சளி, காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. உடனே அவரை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மகனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதில் இருந்தே, அவரது தாயார் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். 

பால்ராஜ் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துவிடுவார் என அவருக்கு மருமகளும், பேத்தியும் ஆறுதல் கூறி வந்துள்ளனர். இந்நிலையில், திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் உடல்நிலை மோசமடைந்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் உயிரிழந்த தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாய்  திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். மகன் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியால் தாயாரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
கோவை லேடிஸ் ஹாஸ்டலில் அதிர்ச்சி! மாடியில் இருந்து குதித்த இளம்பெண்ணின் நிலை என்ன? இதுதான் காரணமாக?